search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளூர் கிரிக்கெட்"

    • ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், கடந்த மாதம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இருவரின் மத்திய ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அப்போது ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர்.

    இதில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதையடுத்து இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் ரூ.1 கோடிக்கான (கிரேடு-சி) பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்க இந்திய ஆண்கள் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமணன், தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்காக அவர்கள் 3 பேர் அடங்கிய குழுவை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்கள் அணிகளின் உள்ளூர் போட்டியை நடத்தும் போது நிறைய சிக்கல்கள் எழுந்தன. வட இந்தியாவில், குறிப்பாக ரஞ்சி டிராபியின் போது, டிசம்பர், ஜனவரில் மோசமான வானிலை காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆண்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்த டிராவிட், லட்சுமனண் அகர்கர் ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

    • கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது
    • பிரகார் தனது ரன் குவிப்பில் 46 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடித்தார்

    கர்நாடகா மாநில ஷிவமோகா நகரில், கேஎஸ்சிஏ நவுலே மைதானத்தில் (KSCA Navule Stadium) 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கூச் பெஹர் கோப்பை (Cooch Behar Trophy) எனும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் மோதின.

    கர்நாடகாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், இளம் பேட்டிங் வீரர், பிரகார் சதுர்வேதி (Prakhar Chaturvedi) சிறப்பாக விளையாடினார்.

    தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பிரகார், 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் புதிய சாதனையை படைத்தார்.

    பிரகார் 638 பந்துகளில் தனது அதிரடி பேட்டிங்கால் 46 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள் அடித்தார்.

    இதன் மூலம், ஒரு போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 24 வருடங்களுக்கு முன் புரிந்திருந்த சாதனையான 358 ரன்களை கடந்து பிரகார் சதுர்வேதி புது சாதனையை புரிந்தார்.


    தனது சிறப்பான ஆட்டத்தினால் ரஞ்சி கோப்பையில் இடம் பெறும் வாய்ப்புக்கு பிரகார் தகுதி பெற்றவராகிறார்.

    பிரகார் சதுர்வேதியின் தந்தை பெங்களூரூவில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். பிரகாரின் தாய், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணி புரிகிறார்.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய கர்நாடகா, 223 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 890 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸ் ரன்கள் (510) அடிப்படையில் வெற்றி பெற்றது.


    உள்ளூர் ஒருநாள் தொடரில் 257 ரன்கள் குவித்த டி ஆர்சி ஷார்ட், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெயரையும் படைத்துள்ளார். #AustraliaCricket #DArcyShort #WAvQL
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்சர்கள் விளாசி 257 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

    கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள குயின்ஸ்லாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    ×